• Sep 22 2024

மாயமான தாயின் தங்க நகை...! மீட்க சென்ற மகனின் நகையும் பறிப்பு...! samugammedia

Sharmi / Oct 6th 2023, 1:00 pm
image

Advertisement

வீட்டின் முன் வீதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகை இனந்தெரியாத நபரால் அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவமானது நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவர் தனது தனது வீட்டின் முன் வீதியில் நின்றுகொண்டிருந்த வேளையில் அவரது கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார்.

குறித்த நபர் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண்ணின் மகன் அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்றுள்ளார்.

இதனை அவதானித்த திருடன் உடனே கத்தியை காட்டி மகனை பயமுறுத்தி மகனின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையையும் பறித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாயமான தாயின் தங்க நகை. மீட்க சென்ற மகனின் நகையும் பறிப்பு. samugammedia வீட்டின் முன் வீதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகை இனந்தெரியாத நபரால் அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவமானது நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.பெண்ணொருவர் தனது தனது வீட்டின் முன் வீதியில் நின்றுகொண்டிருந்த வேளையில் அவரது கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.இந்நிலையில் இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார்.குறித்த நபர் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண்ணின் மகன் அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்றுள்ளார்.இதனை அவதானித்த திருடன் உடனே கத்தியை காட்டி மகனை பயமுறுத்தி மகனின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையையும் பறித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement