தேங்காய் வியாபாரி ஒருவரின் வீட்டுக்குள் கூரிய ஆயுதங்களுடன் நுழைந்து அங்கிருந்தவர்களை பயமுறுத்தி, சுமார் இரண்டு கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் மாதம்பை - தம்பகல்ல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலேயேஇடம்பெற்றுள்ளது.
கொள்ளையர்கள் வீட்டு உரிமையாளர்களை பயமுறுத்தி ஓர் அறையில் அவர்களை அடைத்தே இவ்வாறு கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தேங்காய் வியாபாரி ஒருவரின் வீட்டிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டில் இருந்த வாகனங்களின் திறப்பு, மற்றும் தொலைபேசிகளையும் கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.