வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் மார்கழித் திருவாதிரை உற்சவம் இன்று காலை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இவ் திருவாதிரை உற்சவத்தில் உள்வீதியுடாக அலங்கரித்து வந்த அலங்காரகந்தன், வள்ளி,தெய்வானை ஆகிய தெய்வங்களுடன் இடபவாகனத்தில் வீற்று வெளிவீதியில் காட்சியளித்தார்.
இந்த உற்சவத்தில் பல பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.