யாழ். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
"முறையான விழிப்புணர்வுடன் விழிப்பாக இருப்பதன் மூலம் அனர்த்த அபாயத்தை குறைத்துக்கொள்வோம்" எனும் தொனிப் பொருளின் கீழ் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
மும்மத தலைவர்களது ஆசியோடு தேசிய கொடி ஏற்றப்பட்டு ஆரம்பமாகிய தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது."முறையான விழிப்புணர்வுடன் விழிப்பாக இருப்பதன் மூலம் அனர்த்த அபாயத்தை குறைத்துக்கொள்வோம்" எனும் தொனிப் பொருளின் கீழ் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.மும்மத தலைவர்களது ஆசியோடு தேசிய கொடி ஏற்றப்பட்டு ஆரம்பமாகிய தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.