முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்காவின் தலைமையில் பல முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாசத்திற்கான யாத்திரை எனும் தொனிப்பொருளில் யாத்திரையொன்றை முன்னெடுக்க தீர்மானித்திருந்த நிலையில் குறித்த பாசத்திற்கான யாத்திரையானது இன்றையதினம்(19) காலை யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.
யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பாத யாத்திரையை முன்னின்று நடாத்தும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினரும் யாத்திரையில் இணைந்துகொண்டனர்.