• Sep 17 2024

உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்... நாடாளுமன்றமும் செயல்பட முடியாத நிலை!

Tamil nila / Jan 24th 2023, 9:01 pm
image

Advertisement

கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில்,  தற்போது மின்சார பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.


கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில், பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொடுவதாலும், உணவு பொருட்கள் பற்றாக்குறை நீடிப்பதாலும், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில்,  தற்போது மின்சார பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டதால், முக்கிய நகரங்களில் மின்சாரம் இல்லாமல் போனது. பாகிஸ்தானின் ஜியோ நியூஸ், கராச்சி மற்றும் லாகூரில் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது.


முன்னதாக திங்கட்கிழமை காலை 7.34 மணியளவில், பாகிஸ்தான் மின்சாரத்தின் நேஷனல் கிரிட் அமைப்பின் அதிர்வெண் செயலிழந்ததன் காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் வினியோகம் இல்லாமல் ஸ்தம்பித்தது. தலைநகர் இஸ்லாமாபாத்திள் உள்ள மின் சப்ளை செய்யும் நிறுவனமான ISCO, 117 கிரிட் நிலையங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டதை உறுதி செய்தது. மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் எரிசக்தி அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ரேடியோ பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.



 பாகிஸ்தானில் நிலவும் மின்வெட்டுக்கு மத்தியில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள தேசிய சட்டமன்றம் முதல் செனட் செயலகம் வரை, அடுத்த மூன்று நாட்களுக்கு செயல்படாது என கூறப்படுகிறது. கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதே இதற்கு காரணம் என பார்லிமென்ட் நிர்வாகம் கூறியுள்ளது.


 ஆனால் கஜானா காலியாக உள்ளதா, மின்சார தட்டுபாடு தான் காரணமாக என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். முன்னதாக திங்கள்கிழமை காலை பாகிஸ்தானில் தேசிய மின்கட்டமைப்பு செயலிழந்ததால் மின்சாரம் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் முழுவதும் மின்சார வினியோகம் இல்லாமல் ஸ்தம்பித்தது.



பாகிஸ்தான் நாடாளுமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டாலும்,  மின்சாரம் கசிவினால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய முழு வயரிங் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறதும். சம்பவம் குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற வளாகம் மூடப்பட்டுள்ளது. 


பாகிஸ்தான் செனட் தலைவர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோர் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற மாளிகை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர். இதன் காரணமாக திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் நாடாளுமன்ற வளாகத்தை செனட் செயலகம் மூடியது. செனட் அவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவில், ஜனவரி 26ஆம் தேதி மாலை 4 மணி முதல் காலை 11 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற இருந்த கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன..

உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் பாகிஸ்தான். நாடாளுமன்றமும் செயல்பட முடியாத நிலை கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில்,  தற்போது மின்சார பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில், பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொடுவதாலும், உணவு பொருட்கள் பற்றாக்குறை நீடிப்பதாலும், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில்,  தற்போது மின்சார பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டதால், முக்கிய நகரங்களில் மின்சாரம் இல்லாமல் போனது. பாகிஸ்தானின் ஜியோ நியூஸ், கராச்சி மற்றும் லாகூரில் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது.முன்னதாக திங்கட்கிழமை காலை 7.34 மணியளவில், பாகிஸ்தான் மின்சாரத்தின் நேஷனல் கிரிட் அமைப்பின் அதிர்வெண் செயலிழந்ததன் காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் வினியோகம் இல்லாமல் ஸ்தம்பித்தது. தலைநகர் இஸ்லாமாபாத்திள் உள்ள மின் சப்ளை செய்யும் நிறுவனமான ISCO, 117 கிரிட் நிலையங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டதை உறுதி செய்தது. மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் எரிசக்தி அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ரேடியோ பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் நிலவும் மின்வெட்டுக்கு மத்தியில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள தேசிய சட்டமன்றம் முதல் செனட் செயலகம் வரை, அடுத்த மூன்று நாட்களுக்கு செயல்படாது என கூறப்படுகிறது. கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதே இதற்கு காரணம் என பார்லிமென்ட் நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் கஜானா காலியாக உள்ளதா, மின்சார தட்டுபாடு தான் காரணமாக என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். முன்னதாக திங்கள்கிழமை காலை பாகிஸ்தானில் தேசிய மின்கட்டமைப்பு செயலிழந்ததால் மின்சாரம் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் முழுவதும் மின்சார வினியோகம் இல்லாமல் ஸ்தம்பித்தது.பாகிஸ்தான் நாடாளுமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டாலும்,  மின்சாரம் கசிவினால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய முழு வயரிங் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறதும். சம்பவம் குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற வளாகம் மூடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் செனட் தலைவர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோர் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற மாளிகை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர். இதன் காரணமாக திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் நாடாளுமன்ற வளாகத்தை செனட் செயலகம் மூடியது. செனட் அவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவில், ஜனவரி 26ஆம் தேதி மாலை 4 மணி முதல் காலை 11 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற இருந்த கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement