வெளிநாட்டு பிரஜையின் குடியிருப்புக்குள் இனம் தெரியாத குழுவொன்று புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தியதில் ஐவர் காமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் நள்ளிரவு கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சிறு கொடுக்கல் வாங்கல் சம்பவமே தாக்குதலில் முடிவடைந்துள்ளது.
வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை குறித்த குழு தாக்கியுள்ளது. சம்பவத்தை அவதானித்த தாக்குதலுக்குள்ளான வீட்டாரில் ஒருவர் தனது நண்பன் தாக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதிக்கு சென்றுள்ளார்.
இதேவேளை குறித்த இளைஞனின் கால் பகுதியில் தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் கூறிய ஆதங்களினால் தாக்கியதாகவும் தடுத்த பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தை தொடர்ந்து, நேற்றையதினம் நள்ளிரவு 20க்கு மேற்பட்டவர்களைக் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் நுழைந்து சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டதுடன், முதியவர்களான கணவன் மனைவி இருவருக்கும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக பொலாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் பெறுமதியான பொருட்களை சேதமாக்கியதுடன் சிலவற்றை அபகரித்தும் சென்றுள்ளனர். மேலும் பெற்றோல் குண்டும் தயாரித்து வீசப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தில் நால்வர் வைத்தியசாலையில் வெட்டு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவை சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வெளிநாட்டு பிரஜை கடந்த சில நாட்களிற்கு முன்னர் பெல்ஜியம் நாட்டிலிருந்து தனது வீட்டுக்கு விடுமுறையை கழிப்பதற்காக வருகை தந்துள்ளார்.
அவரது மனைவியின் தாய், தந்தை, சகோதரன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரே சிகிச்சை பெற்று வருவதுடன், வெளிநாட்டு பிரஜைக்கும், அவரது மனைவிக்கும் தாக்குதல் மேற்கொண்டமையால் சிறு உபாதைக்குள்ளாகியுள்ளதாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் பரபரப்பு.வெளிநாட்டு பிரஜையின் குடியிருப்புக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்.ஐவர் வைத்தியசாலையில்.samugammedia வெளிநாட்டு பிரஜையின் குடியிருப்புக்குள் இனம் தெரியாத குழுவொன்று புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தியதில் ஐவர் காமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் நள்ளிரவு கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சிறு கொடுக்கல் வாங்கல் சம்பவமே தாக்குதலில் முடிவடைந்துள்ளது.வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை குறித்த குழு தாக்கியுள்ளது. சம்பவத்தை அவதானித்த தாக்குதலுக்குள்ளான வீட்டாரில் ஒருவர் தனது நண்பன் தாக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதிக்கு சென்றுள்ளார்.இதேவேளை குறித்த இளைஞனின் கால் பகுதியில் தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் கூறிய ஆதங்களினால் தாக்கியதாகவும் தடுத்த பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் சம்பவத்தை தொடர்ந்து, நேற்றையதினம் நள்ளிரவு 20க்கு மேற்பட்டவர்களைக் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் நுழைந்து சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டதுடன், முதியவர்களான கணவன் மனைவி இருவருக்கும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக பொலாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த குழுவினர் பெறுமதியான பொருட்களை சேதமாக்கியதுடன் சிலவற்றை அபகரித்தும் சென்றுள்ளனர். மேலும் பெற்றோல் குண்டும் தயாரித்து வீசப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.சம்பவத்தில் நால்வர் வைத்தியசாலையில் வெட்டு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவை சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.குறித்த வெளிநாட்டு பிரஜை கடந்த சில நாட்களிற்கு முன்னர் பெல்ஜியம் நாட்டிலிருந்து தனது வீட்டுக்கு விடுமுறையை கழிப்பதற்காக வருகை தந்துள்ளார்.அவரது மனைவியின் தாய், தந்தை, சகோதரன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரே சிகிச்சை பெற்று வருவதுடன், வெளிநாட்டு பிரஜைக்கும், அவரது மனைவிக்கும் தாக்குதல் மேற்கொண்டமையால் சிறு உபாதைக்குள்ளாகியுள்ளதாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.