• May 18 2024

அதிக மாத்திரைகளை உட்கொண்ட பேராதனை பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு! SamugamMedia

Chithra / Mar 1st 2023, 11:19 am
image

Advertisement

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர்  மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (28) இரவு குறித்த மாணவி சுகயீனமுற்றிருந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.


பேராதனை பல்கலைக்கழகத்தின் மலலசேகர விடுதியில் குறித்த மாணவி காணப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (01) காலை உயிரிழந்துள்ளார்.

குருநாகல் பகுதியைச் சேர்ந்த வினோதி டி சில்வா என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாகவும் அவர் சில காலமாக மன அழுத்தத்தினால் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பல்கலைக்கழக  நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

அதிக மாத்திரைகளை உட்கொண்ட பேராதனை பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு SamugamMedia பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர்  மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.செவ்வாய்க்கிழமை (28) இரவு குறித்த மாணவி சுகயீனமுற்றிருந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.பேராதனை பல்கலைக்கழகத்தின் மலலசேகர விடுதியில் குறித்த மாணவி காணப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (01) காலை உயிரிழந்துள்ளார்.குருநாகல் பகுதியைச் சேர்ந்த வினோதி டி சில்வா என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாகவும் அவர் சில காலமாக மன அழுத்தத்தினால் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பல்கலைக்கழக  நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement