நுவரெலியா – நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் இருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்களும் அடங்கியுள்ளனர்.
இதேவேளை நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானதுடன், 53 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவமனைத் தரப்பு தெரிவித்துள்ளது.
நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று டிக்கோயா பகுதியில் பயணித்த சிற்றூர்ந்து ஒன்றுடன் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் மோதிய போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
சம்பவத்தின் போது, ரதல்ல குறுக்கு வீதியின் செங்குத்தான பாதையில் பயணித்த பேருந்து, குறித்த பாதையில் மேல் நோக்கி பயணித்த சிற்றூர்ந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
அத்துடன், சிற்றூர்திக்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளது. குறித்த பேருந்தில் தடையாளி இயங்காமையே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 13 வயது சிறுவன், 26 மற்றும் 27 வயதுடைய 3 ஆண்கள், 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 43 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நுவரெலியாவில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல் நுவரெலியா – நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் இருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்களும் அடங்கியுள்ளனர்.இதேவேளை நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானதுடன், 53 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவமனைத் தரப்பு தெரிவித்துள்ளது.நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று டிக்கோயா பகுதியில் பயணித்த சிற்றூர்ந்து ஒன்றுடன் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் மோதிய போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.சம்பவத்தின் போது, ரதல்ல குறுக்கு வீதியின் செங்குத்தான பாதையில் பயணித்த பேருந்து, குறித்த பாதையில் மேல் நோக்கி பயணித்த சிற்றூர்ந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.அத்துடன், சிற்றூர்திக்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளது. குறித்த பேருந்தில் தடையாளி இயங்காமையே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.உயிரிழந்தவர்களில் 13 வயது சிறுவன், 26 மற்றும் 27 வயதுடைய 3 ஆண்கள், 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 43 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.