உலகத் தமிழர்களுக்கு அடையாளம் தந்த தலைவர் பிரபாகரன், உலகின் மிகச் சிறந்த தலைவர் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்
கனடாவில் நடந்த Easy Entertaining Night -2023 நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நடிகை கஸ்தூரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலம்பெயர் தலைமுறைகளிடமே ஈழப் போராட்டம் கையளிக்கப்பட்டுள்ளது. தலைவர் பிரபாகரனின் கனவை புலம்பெயர் தலைமுறைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதேவேளை குறித்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
விளம்பரதாரர்களின் பங்களிப்பு, கலைநிகழ்வுகளின் சங்கம், மங்கலகரமான ஆரம்பம், உற்சாகமூட்டும் பேச்சுக்கள் இடம்பெற்றன.
நடிகை கஸ்தூரியின் சிறப்பு மிக்க பேச்சுடன் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
அத்துடன், நம்மாட்டு கலைஞர்களின் ஆளுமைகளை வெளிக்காட்டும் வகையில் பல நிகழ்வுகள் மேடையில் அரங்கேற்றப்பட்டன.
மேலும் நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் காணொளி வழி கலந்து வாழ்த்துத் தெரிவித்தார்.
உலகின் மிகச் சிறந்த தலைவர் பிரபாகரன் தான் - நடிகை கஸ்தூரி புகழராம் Samugammedia உலகத் தமிழர்களுக்கு அடையாளம் தந்த தலைவர் பிரபாகரன், உலகின் மிகச் சிறந்த தலைவர் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார் கனடாவில் நடந்த Easy Entertaining Night -2023 நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நடிகை கஸ்தூரி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர் தலைமுறைகளிடமே ஈழப் போராட்டம் கையளிக்கப்பட்டுள்ளது. தலைவர் பிரபாகரனின் கனவை புலம்பெயர் தலைமுறைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.இதேவேளை குறித்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.விளம்பரதாரர்களின் பங்களிப்பு, கலைநிகழ்வுகளின் சங்கம், மங்கலகரமான ஆரம்பம், உற்சாகமூட்டும் பேச்சுக்கள் இடம்பெற்றன. நடிகை கஸ்தூரியின் சிறப்பு மிக்க பேச்சுடன் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.அத்துடன், நம்மாட்டு கலைஞர்களின் ஆளுமைகளை வெளிக்காட்டும் வகையில் பல நிகழ்வுகள் மேடையில் அரங்கேற்றப்பட்டன. மேலும் நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் காணொளி வழி கலந்து வாழ்த்துத் தெரிவித்தார்.