உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்காக மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியற்பீட மாணவர்களால் நடத்தப்படும் முன்னோடிப்பரீட்சை(Mora Exams) பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்காக மொறட்டுவைப் பல்கலைக்கழக பொறியியற்பீட தமிழ் மாணவர்களால் 13 வருடங்களாக நடாத்தப்படும் முன்னோடிப்பரீட்சை இவ்வருடமும் 22 மாவட்டங்களை உள்ளடக்கிய 68 பரீட்சை நிலையங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிமூலமாகவும் இடம்பெற்றுள்ளது.
26/11/2022 ல் ஆரம்பமாகிய இப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
Mora Exams 2022 இற்கான பெறுபேறுகளை எங்கள் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் காணலாம்.