புதுச்சேரியில் 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு மரணிக்கும் வரை ஆயுள்தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரியை அருகே கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (53). இவர் கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்துப் பண்ணை நடத்தி வந்தார். குறித்த பண்ணையை கவனித்துக் கொள்ளவும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்ட வேலைகளுக்கு அனுப்பவும் ஆட்களை வைத்து இருந்ததாக கூறப்படுகின்றது.
இதற்காக தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் குடும்பம் நடத்தவே கஷ்டப்படுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பணம் கொடுத்து சிறுமிகள் உள்பட பலரை கொத்தடிமையாக அழைத்து வந்து, இதுபோன்ற வேலைகளில் கன்னியப்பன் ஈடுபடுத்தி வந்துள்ளார். இவர்களில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்த 5 சிறுமிகளும் அடங்கியுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஐந்து சிறுமிகளை கூட்டுப்பாலியல் வன்கொடுமை புரிந்த 7 பேருக்கு நேர்ந்த கதி புதுச்சேரியில் 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு மரணிக்கும் வரை ஆயுள்தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.புதுச்சேரியை அருகே கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (53). இவர் கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்துப் பண்ணை நடத்தி வந்தார். குறித்த பண்ணையை கவனித்துக் கொள்ளவும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்ட வேலைகளுக்கு அனுப்பவும் ஆட்களை வைத்து இருந்ததாக கூறப்படுகின்றது.இதற்காக தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் குடும்பம் நடத்தவே கஷ்டப்படுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பணம் கொடுத்து சிறுமிகள் உள்பட பலரை கொத்தடிமையாக அழைத்து வந்து, இதுபோன்ற வேலைகளில் கன்னியப்பன் ஈடுபடுத்தி வந்துள்ளார். இவர்களில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்த 5 சிறுமிகளும் அடங்கியுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.