யாழில் இருந்து சங்கானை ஊடாக மாதகலிற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து மீது இன்று மதியம் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சண்டிலிப்பாயைச் சேர்ந்த இருவர் இவ்வாறு பேருந்து மீது மேற்கொண்ட தாக்குதலில் பேருந்தின் பின்பக்கம் சேதமடைந்துள்ளது.
இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் சூத்திரதாரிகளை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.