அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்மொழிவு தமிழ் தேசிய கூட்டணியினரால் கையளிக்கப்பட்டது.
13 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளையும், யோசனைகளையும் எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய இன்றைய தினம் ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரினால் முன்மொழிவுகளும், யோசனைகளும் அடங்கிய கடிதம் கையளிக்கப்பட்டது.