கொழும்பு டீன்ஸ் வீதி, வைத்தியசாலை சதுக்கம் உள்ளிட்ட வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கமைய இன்று முற்பகல் 8.30 முதல் நாளை முற்பகல் 8.30 வரையில் குறித்த பகுதிகளில் ஆர்பாட்டங்களை மேற்கொள்ள தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை காவல் துறையினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மாளிகாகந்த நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.