சிரச ஊடக நிறுவனத்துடன் ஜனாதிபதி ஏதோவொரு கோபம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இன்று சபையில் குறிப்பிட்டிருந்தார்.
எமது அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு சிரச ஊடக நிறுவனத்துடன் பிரச்சினை இருப்பதை நான் அறிவேன்.
இந்த உத்தேச சட்டமூலத்திலுள்ள கூடுதலான உறுப்புரைகள், ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் அடக்கும் முயற்சியாகவே வரையறுக்கப்ட்டுள்ளது.
நான் ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இங்கிலாந்து போன்ற மிகவும் வளர்ந்த ஊடகங்களைக் கொண்ட நாடுகளைப் பின்பற்றி அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தேன்.
முதலில் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டதை போன்று இது தொடர்பில் முதலில் எம்முடன் கலந்துரையாடுங்கள்.
இந்த உத்தேச சட்டமூல வரைபிற்கு நாங்களும் ஒத்துழைப்பு தருகின்றோம்.
ஊடகம் தொடர்பான ஒழுங்குபடுத்தல்கள் தேவை இல்லை என எவரும் கூறவில்லை.
ஊடக நெறிமுறை தொடர்பான ஒழுங்குபடுதல் அவசியம்.
ஆனால் தற்போது வரையப்பட்டுள்ள சட்டமூலத்தால் ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களை அரச காலடியில் மண்டியிடச்செய்யமுடியும்.
சிரச ஊடக நிறுவனத்துடன் ரணிலுக்கு ஏதோவொரு கோபம் உள்ளது – சபையில் வெளியான தகவல். samugammedia சிரச ஊடக நிறுவனத்துடன் ஜனாதிபதி ஏதோவொரு கோபம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இன்று சபையில் குறிப்பிட்டிருந்தார். எமது அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு சிரச ஊடக நிறுவனத்துடன் பிரச்சினை இருப்பதை நான் அறிவேன். இந்த உத்தேச சட்டமூலத்திலுள்ள கூடுதலான உறுப்புரைகள், ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் அடக்கும் முயற்சியாகவே வரையறுக்கப்ட்டுள்ளது.நான் ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இங்கிலாந்து போன்ற மிகவும் வளர்ந்த ஊடகங்களைக் கொண்ட நாடுகளைப் பின்பற்றி அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தேன்.முதலில் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டதை போன்று இது தொடர்பில் முதலில் எம்முடன் கலந்துரையாடுங்கள்.இந்த உத்தேச சட்டமூல வரைபிற்கு நாங்களும் ஒத்துழைப்பு தருகின்றோம்.ஊடகம் தொடர்பான ஒழுங்குபடுத்தல்கள் தேவை இல்லை என எவரும் கூறவில்லை.ஊடக நெறிமுறை தொடர்பான ஒழுங்குபடுதல் அவசியம்.ஆனால் தற்போது வரையப்பட்டுள்ள சட்டமூலத்தால் ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களை அரச காலடியில் மண்டியிடச்செய்யமுடியும்.