நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட வரிக் கோப்பொன்றை ஆரம்பிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கம் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒரு அமைச்சரின் தனிப்பட்ட ஊழியர்களாக சேரும் அனைத்து பிரதிநிதிகளுக்கும் வரிக் கோப்பொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்