இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகளுக்கான ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக ரசீட் கான் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரின் பின்னர், ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் பதவியில் இருந்து மொஹமட் நபி விலகினார்.
அந்த வெற்றிடத்திற்கே ரசீட் கான் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கட் சபை தலைவர் மிர்வைஸ் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை ரசீட் கான் வழி நடத்தவுள்ளார்.