வவுனியா குட்செட் வீதியில் கடந்த செவ்வாய் கிழமை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் இறுதி நிகழ்வுகள் இன்றையதினம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், இன்று காலை குறித்த குடும்பத் தலைவரின் பூதவுடல் வவுனியா யங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தில் அஞ்சலிக்காக வைக்கபட்டதோடு அவரது மனைவியின் பூதவுடல் அவர் கற்பித்த பாடசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டு கல்விச் சமூகத்தினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த குடும்பஸ்தவர்களது இறுதி நிகழ்வுகள் இன்று மாலை வவுனியா வெளிக்குளத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.