வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாக்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மாகாண தலைவர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போதும் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்கள் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மறுவாழ்வளிப்பது தொடர்பில் ஆளுநருக்கு மாகாண அதிகாரிகளுக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.