தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அபிலாசைகளை கருத்தில் கொண்டே அனைத்து தமிழ் கட்சிகளும் ஜனாதிபதியுடனான பேச்சுவார்தைகளை முன்னெடுக்கவேண்டுமென வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர் வாசுகி வல்லிபுரம் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணையுமாறு அவர் வலியுறுத்தியிருந்தார்.
எட்டு மாவட்டங்களிலும் கடந்த ஆறு நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.