• Nov 26 2025

இனி வீதித் தகுதிச் சான்றிதழ் கட்டாயம் - சாரதிகளின் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறியவும் புதிய திட்டம்

Chithra / Nov 25th 2025, 11:32 am
image

அனைத்துப் பேருந்துகளும் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் அடிப்படை வீதித் தகுதிச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் எனப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

மாகும்புர பல்நிலை போக்குவரத்து நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

அத்துடன் வீதித் தகுதிப் பரிசோதனை ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு பேருந்தும் அதிகாரப்பூர்வச் சான்றிதழைப் பெற வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் சான்றளிக்கப்பட்ட சோதனை மையங்களில் பேருந்துகளை பரிசோதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


இந்நிலையில் பயணிகள் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறியும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட நடமாடும் பரிசோதனைப் பேருந்து ஒன்றைத் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்தப் புதிய முன்முயற்சி தொடங்கி வைக்கப்பட்டது. 

 

இந்த நடமாடும் பிரிவு, நாடு முழுவதும் உள்ள பயணிகள் பேருந்துகளில் பணிபுரியும் சாரதிகள்  மற்றும் நடத்துநர்களுக்கு திடீர் சோதனைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கடமையில் இருக்கும்போது போக்குவரத்து ஊழியர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனைகள் உதவும். 

  

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களில் கணிசமானோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாகவும், இத்தகைய நபர்களின் அலட்சியமான நடத்தை காரணமாகவே பயணிகள் பேருந்து விபத்துகளில் கிட்டத்தட்ட 53 சதவீதம் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார். 

 

தொழில்சார் தரங்கள் மீட்டெடுக்கப்படாவிட்டால், பேருந்துத் தொழில் சரிவை நோக்கிச் செல்லும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். 

 

மாகும்புர நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள நடமாடும் பேருந்தில், ஓட்டுநர்கள் தங்கள் வேலையைத் தொடங்கும் முன்னர் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இனி வீதித் தகுதிச் சான்றிதழ் கட்டாயம் - சாரதிகளின் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறியவும் புதிய திட்டம் அனைத்துப் பேருந்துகளும் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் அடிப்படை வீதித் தகுதிச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் எனப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகும்புர பல்நிலை போக்குவரத்து நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் வீதித் தகுதிப் பரிசோதனை ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு பேருந்தும் அதிகாரப்பூர்வச் சான்றிதழைப் பெற வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சான்றளிக்கப்பட்ட சோதனை மையங்களில் பேருந்துகளை பரிசோதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.இந்நிலையில் பயணிகள் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறியும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட நடமாடும் பரிசோதனைப் பேருந்து ஒன்றைத் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.  போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்தப் புதிய முன்முயற்சி தொடங்கி வைக்கப்பட்டது.  இந்த நடமாடும் பிரிவு, நாடு முழுவதும் உள்ள பயணிகள் பேருந்துகளில் பணிபுரியும் சாரதிகள்  மற்றும் நடத்துநர்களுக்கு திடீர் சோதனைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடமையில் இருக்கும்போது போக்குவரத்து ஊழியர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனைகள் உதவும்.   ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களில் கணிசமானோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாகவும், இத்தகைய நபர்களின் அலட்சியமான நடத்தை காரணமாகவே பயணிகள் பேருந்து விபத்துகளில் கிட்டத்தட்ட 53 சதவீதம் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.  தொழில்சார் தரங்கள் மீட்டெடுக்கப்படாவிட்டால், பேருந்துத் தொழில் சரிவை நோக்கிச் செல்லும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.  மாகும்புர நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள நடமாடும் பேருந்தில், ஓட்டுநர்கள் தங்கள் வேலையைத் தொடங்கும் முன்னர் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement