ஆர்ப்பாட்டங்கள், இணையத்தாக்குதல்களுக்கு நிதியுதவி வழங்கவதன் மூலம், மால்டோவை சீர்குiலைக்க ரஷ்யா முயல்கிறது என அந்நாட்டின் பிரதமர் நடாலியா கவ்ரிலிசா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், மால்டோவாவில் இருந்து தப்பி ஓடிய தன்னலக்குழுக்கள், பொருளாதாரத் தடை பட்டியலின்கீழ் சேர்க்கப்பட்டு, அவர்களின் பணப்புழக்கம் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், போராட்டக்குழுக்களுக்கு பணம் வழங்கி, மால்டோவாவை அரசியல் ரீதியாக சீர்குலைக்க ரஷ்ய சார்பு சக்திகள் முயற்சிக்கின்றன. உக்ரைனில் நடக்கும் போரின் பரிணாமம் மால்டோவாவில் தாக்கம் செலுத்துகிறது.
மால்டாவின் பாதுகாப்பிற்காகவும், பரந்துபட்ட நாடுகளுக்காகவும் போராடுவதை நாங்கள் பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.
போராட்டக் குழுக்களுக்கு பணம் செலுத்தி அரசியல் ரீதியாக குழப்பம் ஏற்படுத்த திட்டமிடும் ரஷ்யா ஆர்ப்பாட்டங்கள், இணையத்தாக்குதல்களுக்கு நிதியுதவி வழங்கவதன் மூலம், மால்டோவை சீர்குiலைக்க ரஷ்யா முயல்கிறது என அந்நாட்டின் பிரதமர் நடாலியா கவ்ரிலிசா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், மால்டோவாவில் இருந்து தப்பி ஓடிய தன்னலக்குழுக்கள், பொருளாதாரத் தடை பட்டியலின்கீழ் சேர்க்கப்பட்டு, அவர்களின் பணப்புழக்கம் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், போராட்டக்குழுக்களுக்கு பணம் வழங்கி, மால்டோவாவை அரசியல் ரீதியாக சீர்குலைக்க ரஷ்ய சார்பு சக்திகள் முயற்சிக்கின்றன. உக்ரைனில் நடக்கும் போரின் பரிணாமம் மால்டோவாவில் தாக்கம் செலுத்துகிறது. மால்டாவின் பாதுகாப்பிற்காகவும், பரந்துபட்ட நாடுகளுக்காகவும் போராடுவதை நாங்கள் பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.