போலந்தில் மற்றுமோர் ரஷ்ய உளவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் போலந்து உள்துறை அமைச்சர் மாஸ்கோ நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவ வசதிகள் மற்றும் துறைமுகங்களை கண்காணித்து வந்தார்.
கைது செய்யப்பட்டவருக்கு ரஷ்யர்கள் முறையாக பணம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த மாதமும் ரஷ்ய உளவாளி ஒருவரை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.