நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் சந்தைகளில் முருங்கைக்காயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த கோடைகாலத்தில் முருங்கைக்காய் விலையில் பெருவீழ்ச்சி ஏற்பட்டது.
அதனால் முருங்கை உற்பத்தியாளர்கள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கினர்.
இந்நிலையில் கடந்த மாதம் கிலோ 80 ரூபாவாக வரை விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்போது சடுதியாக கிலோ 300 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை ஏனைய மரக்கறிகளின் விலைகளும் திடீரென அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.