• May 07 2024

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – பிரதமர் உறுதி samugammedia

Chithra / Nov 9th 2023, 9:15 am
image

Advertisement

வடமாகாண மக்கள் அனுபவித்து வரும் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வில் நேற்று உரையாற்றிய பிரதமர், 

வடக்கிற்குள் நிலவும் நீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் “யாழ்ப்பாண நதி” என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த பொறியியலாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.

ஒட்டுமொத்தமாக, எங்கள் பாரம்பரியத்திற்கு ஏற்ப தண்ணீர் பிரச்சனையை கையாள்வது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

மேலும், கடல்நீரில் இருந்து நன்னீரைப் பெறுதல் திட்டம் மூலம் நீர் வழங்கும்போது நுகர்வோர் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், 

தற்போதுள்ள 40,000 ஏரிகளை மேம்படுத்தவும், மழைநீர் சேகரிப்பு, கடலில் கலக்கும் ஆற்று நீரை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – பிரதமர் உறுதி samugammedia வடமாகாண மக்கள் அனுபவித்து வரும் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார்.பாராளுமன்ற அமர்வில் நேற்று உரையாற்றிய பிரதமர், வடக்கிற்குள் நிலவும் நீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் “யாழ்ப்பாண நதி” என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த பொறியியலாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.ஒட்டுமொத்தமாக, எங்கள் பாரம்பரியத்திற்கு ஏற்ப தண்ணீர் பிரச்சனையை கையாள்வது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.மேலும், கடல்நீரில் இருந்து நன்னீரைப் பெறுதல் திட்டம் மூலம் நீர் வழங்கும்போது நுகர்வோர் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், தற்போதுள்ள 40,000 ஏரிகளை மேம்படுத்தவும், மழைநீர் சேகரிப்பு, கடலில் கலக்கும் ஆற்று நீரை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement