ஜெருசலேமில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில்,கிறிஸ்மஸ் தாத்தா வேசம் அணிந்த நபர்,ஒட்டகத்தின் மேல் அமர்ந்து சென்று, மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பாலஸ்தீனிய கிறிஸ்தவரான இசா கஸ்ஸிஸி என்ற நபர்,கிறிஸ்மஸ் தாத்தா வேசமணிந்து சென்று, மக்களுக்கு கிறிஸ்மஸ் மரங்களை பரிசளித்தார்.
அவருடன்,இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் தாமஸ் நைட்ஸீம் சென்றார்.இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் நீட்டித்து வரும் நிலையில்,அவர் அமைதிக்கு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.