கண்டியில் வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் இன்று (11) காலை பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவர் 26 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.