சீதுவ – கொட்டுகொட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உந்துருளியில் பிரவேசித்த இருவர் இன்று மதியம் இந்த துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.