• May 09 2024

யாழில் சமூக பிறழ்வான நடத்தை! வீடொன்றை முற்றுகையிட்டு இரு பெண்களை மடக்கிப்பிடித்த மக்கள்! தலைதெறிக்க ஓடிய நபர்! samugammedia

Chithra / Jul 1st 2023, 11:22 am
image

Advertisement

யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்ட பிரதேச மக்கள் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபட்டிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் மடக்கிப்பிடித்துள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த மற்றொரு ஆண் தப்பி ஓடியுள்ளார். 

குளப்பிட்டி சந்தியிலிருந்து ஆனைக்கோட்டை செல்லும் வீதியில் உள்ள குறித்த வீட்டில் சமூக பிறழ்வான நடத்தையில் சிலர் தொடர்ச்சியாக ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியபோதும் பொலிஸார் அதனை கண்டுகொள்ளவில்லை என பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து வீட்டை முற்றுகையிட்டு கையும் களவுமாக மடக்கிப் பிடித்துள்ளனர். இதன்போது வீட்டிலிருந்த இளைஞர் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் ஒரு ஆணும் இரு பெண்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.


யாழில் சமூக பிறழ்வான நடத்தை வீடொன்றை முற்றுகையிட்டு இரு பெண்களை மடக்கிப்பிடித்த மக்கள் தலைதெறிக்க ஓடிய நபர் samugammedia யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்ட பிரதேச மக்கள் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபட்டிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் மடக்கிப்பிடித்துள்ளனர்.இந்த நிலையில் வீட்டில் இருந்த மற்றொரு ஆண் தப்பி ஓடியுள்ளார். குளப்பிட்டி சந்தியிலிருந்து ஆனைக்கோட்டை செல்லும் வீதியில் உள்ள குறித்த வீட்டில் சமூக பிறழ்வான நடத்தையில் சிலர் தொடர்ச்சியாக ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியபோதும் பொலிஸார் அதனை கண்டுகொள்ளவில்லை என பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.இதனையடுத்து வீட்டை முற்றுகையிட்டு கையும் களவுமாக மடக்கிப் பிடித்துள்ளனர். இதன்போது வீட்டிலிருந்த இளைஞர் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் ஒரு ஆணும் இரு பெண்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement