பேரணியை குழப்ப முயற்சி – பேருந்துகளை கற்களால் தாக்கிய இராணுவத்தினர்!
இன்று அதிகாலை 5.40 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஏற்றி செல்வதற்காக தரித்து நின்ற பேருந்தினை 40 ஆம் கட்டையில் உள்ள இராணுவத்தினர் கற்களை கொண்டு தாக்கியுள்ளதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.
நான்காவது நாளான இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு நிறைவடையவுள்ள வடக்கு கிழக்கு மக்கள் எழுச்சி பேரணியை வலுச்சேர்பதற்காக பல இடங்களில் இருந்து மக்கள் பேருந்துகளில் பயணித்திருந்தனர்.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளை ஏற்றுவதற்காக தங்கவேலாயுதபுரம் நோக்கிய பயணித்த பேருந்தினை 40 ஆம் கட்டடையடியில் வைத்து கற்கால் இராணுவத்தின்ர் தாக்கியுள்ளனர்.
குறித்த கண்ணாடியின் பெறுமதி இரண்டரை இலட்சம் ரூபாய் என்று பஸ் சாரதி கூறிவிட்டு உறவுகளை ஏற்றுவதற்கு அவர் சென்று கொண்டிருக்கின்றார்.
இச் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பேரணியை குழப்ப முயற்சி – பேருந்தை கற்களால் தாக்கிய இராணுவத்தினர் நூலிழையில் உயிர் தப்பிய சாரதி பேரணியை குழப்ப முயற்சி – பேருந்துகளை கற்களால் தாக்கிய இராணுவத்தினர் இன்று அதிகாலை 5.40 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஏற்றி செல்வதற்காக தரித்து நின்ற பேருந்தினை 40 ஆம் கட்டையில் உள்ள இராணுவத்தினர் கற்களை கொண்டு தாக்கியுள்ளதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.நான்காவது நாளான இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு நிறைவடையவுள்ள வடக்கு கிழக்கு மக்கள் எழுச்சி பேரணியை வலுச்சேர்பதற்காக பல இடங்களில் இருந்து மக்கள் பேருந்துகளில் பயணித்திருந்தனர்.இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளை ஏற்றுவதற்காக தங்கவேலாயுதபுரம் நோக்கிய பயணித்த பேருந்தினை 40 ஆம் கட்டடையடியில் வைத்து கற்கால் இராணுவத்தின்ர் தாக்கியுள்ளனர்.பேருந்தி சாரதி நூலிலையில் உயிர்தப்பியிருந்ததாக தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.குறித்த கண்ணாடியின் பெறுமதி இரண்டரை இலட்சம் ரூபாய் என்று பஸ் சாரதி கூறிவிட்டு உறவுகளை ஏற்றுவதற்கு அவர் சென்று கொண்டிருக்கின்றார்.இச் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.