• May 18 2024

தாயைத் தாக்கி விட்டு மகன் எடுத்த விபரீத முடிவு..! தமிழர் பகுதியில் சோகச் சம்பவம் samugammedia

Chithra / Jun 15th 2023, 7:05 am
image

Advertisement

தாயைத் தாக்கி விட்டு மகன் விபரீத முடிவெடுத்து உயிர்மாத்த சம்பவம் ஒன்று புதுக்குடியிருப்புப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றெட்பானா, மாணிக்கபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் கணேசன் கேதீஸ்வரன் (வயது-33) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

10 வருடங்களுக்கு முன்னர் மனைவியைப் பிரிந்து, தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். சகோதரி தொழில் நிமிர்த்தம் கொழும்பில் தங்கியுள்ளார்.

இந் நிலையில் நேற்றுமுன்தினம் தாயாருடன் முரண்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தாயைத் தாக்கியுள்ளார். இதனால் தாயார் அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

கொழும்பிலிருந்து மகள் நேற்று அதிகாலை விடுமுறையில் வந்து இருவரும் வீட்டிற்குச் சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் காணப்பட்டது.

இது தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயைத் தாக்கி விட்டு மகன் எடுத்த விபரீத முடிவு. தமிழர் பகுதியில் சோகச் சம்பவம் samugammedia தாயைத் தாக்கி விட்டு மகன் விபரீத முடிவெடுத்து உயிர்மாத்த சம்பவம் ஒன்று புதுக்குடியிருப்புப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றெட்பானா, மாணிக்கபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.நேற்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் கணேசன் கேதீஸ்வரன் (வயது-33) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.10 வருடங்களுக்கு முன்னர் மனைவியைப் பிரிந்து, தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். சகோதரி தொழில் நிமிர்த்தம் கொழும்பில் தங்கியுள்ளார்.இந் நிலையில் நேற்றுமுன்தினம் தாயாருடன் முரண்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தாயைத் தாக்கியுள்ளார். இதனால் தாயார் அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.கொழும்பிலிருந்து மகள் நேற்று அதிகாலை விடுமுறையில் வந்து இருவரும் வீட்டிற்குச் சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் காணப்பட்டது.இது தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement