தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
கொழும்பில் இன்று(20) மற்றும் நாளை(21) இடம்பெறவுள்ள “என்றும் ராஜா ராஜாதான்” மாபெரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்த இசைநிகழ்ச்சி முன்னதாக கடந்த ஜனவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது.
எனினும், இளையராஜாவின் புதல்வி பவதாரணியின் திடீர் மறைவு காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.