யாழ்ப்பாணம் - கொக்குவில் - பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நான்கு இடங்களில் இவ்வாறு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இருந்தபோதும் எதுவித ஆயுதங்களும் அங்கிருந்து மீட்கப்படவில்லை.
யாழில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி - வெறுங்கையோடு திரும்பிய விசேட அதிரடிப்படையினர் யாழ்ப்பாணம் - கொக்குவில் - பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நான்கு இடங்களில் இவ்வாறு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.இருந்தபோதும் எதுவித ஆயுதங்களும் அங்கிருந்து மீட்கப்படவில்லை.