• May 19 2024

தென் கொரியாவில் ஸ்பைடர்மேன் வாலிபர் அதிரடியாக கைது..!samugammedia

Sharmi / Jun 13th 2023, 9:12 am
image

Advertisement

தென் கொரியாவில் ஸ்பைடர்மேன் போல் வித்தை காட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ளது லோட்டே வேர்ல்ட் டவரில் பக்கவாட்டு சுவர் வழியாக சுவர் ஒருவர் கட்டிடத்தில் ஏற தொடங்கியுள்ளார்.

கயிறு உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அவர் ஏறியதைப் பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த பகுதியில் கூட்டம் கூட ஆரம்பித்த நிலையில் பொலிசாரும் தீயணைப்பு படையினரும் வந்துள்ளனர். அவரை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

அந்த வாலிபர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கட்டிடத்தின் மீது ஏறிய நிலையில், 73வது தளத்தை அடைந்தபோது, அவரை கட்டிடத்திற்குள் வரச் செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விசாரணையில் அந்த நபர் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக விரிவான தகவல் எதுவும் காவல்துறை தரப்பில் வெளியிடப்படவில்லை.


தென் கொரியாவில் ஸ்பைடர்மேன் வாலிபர் அதிரடியாக கைது.samugammedia தென் கொரியாவில் ஸ்பைடர்மேன் போல் வித்தை காட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ளது லோட்டே வேர்ல்ட் டவரில் பக்கவாட்டு சுவர் வழியாக சுவர் ஒருவர் கட்டிடத்தில் ஏற தொடங்கியுள்ளார்.கயிறு உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அவர் ஏறியதைப் பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த பகுதியில் கூட்டம் கூட ஆரம்பித்த நிலையில் பொலிசாரும் தீயணைப்பு படையினரும் வந்துள்ளனர். அவரை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். அந்த வாலிபர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கட்டிடத்தின் மீது ஏறிய நிலையில், 73வது தளத்தை அடைந்தபோது, அவரை கட்டிடத்திற்குள் வரச் செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் அந்த நபர் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விரிவான தகவல் எதுவும் காவல்துறை தரப்பில் வெளியிடப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement