• May 03 2024

புலிகளுக்கு விற்கப்படும் ஸ்ரீலங்கா டெலிகொம்..! சபையில் போட்டுடைத்த பொன்சேகா..! samugammedia

Chithra / Jun 22nd 2023, 5:10 pm
image

Advertisement

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணப்பரிமாற்றம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை விற்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

அத்துடன், தங்கத் திருடனை எப்படிப் பாதுகாத்து இந்தச் சபைக்கு அழைத்து வந்தார்கள் என்பதைப் பார்த்தோம்.எனவே இன்று சட்டத்தைப் பற்றி பேசி பயனில்லை 

இவற்றைச் செய்வதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

மக்கள் உணவு, பானங்கள் இன்றி தவித்து வருவதோடு, இக்கட்டான சூழ்நிலையை மக்கள் புரிந்து கொண்டு வாழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பல்வேறு சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்து மக்களை அடக்க முயற்சிக்கிறது. அதனைக் கொண்டு ஊடகங்களை பழிவாங்க முயற்சிக்கின்றனர்.

இந்த நாட்டில் நீதித்துறை மிகவும் ஊழல் நிறைந்தது என்பதோடு, ஊழல் தடுப்பு மசோதாவை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

இவர்கள் ஒரு ஹிட்லரைப் போலவே வாழ முயற்சிக்கின்றனர்.


புலிகளுக்கு விற்கப்படும் ஸ்ரீலங்கா டெலிகொம். சபையில் போட்டுடைத்த பொன்சேகா. samugammedia கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணப்பரிமாற்றம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை விற்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.அத்துடன், தங்கத் திருடனை எப்படிப் பாதுகாத்து இந்தச் சபைக்கு அழைத்து வந்தார்கள் என்பதைப் பார்த்தோம்.எனவே இன்று சட்டத்தைப் பற்றி பேசி பயனில்லை இவற்றைச் செய்வதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.மக்கள் உணவு, பானங்கள் இன்றி தவித்து வருவதோடு, இக்கட்டான சூழ்நிலையை மக்கள் புரிந்து கொண்டு வாழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பல்வேறு சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்து மக்களை அடக்க முயற்சிக்கிறது. அதனைக் கொண்டு ஊடகங்களை பழிவாங்க முயற்சிக்கின்றனர்.இந்த நாட்டில் நீதித்துறை மிகவும் ஊழல் நிறைந்தது என்பதோடு, ஊழல் தடுப்பு மசோதாவை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.இவர்கள் ஒரு ஹிட்லரைப் போலவே வாழ முயற்சிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement