• May 03 2024

உலக அழகி போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை பெண் துஷாரி...! குவியும் பாராட்டு...!

Sharmi / Apr 20th 2024, 1:53 pm
image

Advertisement

அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக திருமதி துஷாரி ஜெயக்கொடி நேற்று (19) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.

உலகின் 33 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகுராணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி நாளை(21) முதல் 25ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூயார்க்கில்  நடைபெறவுள்ளது.

திருமதி துஷாரி ஜெயக்கொடி அண்மையில் இலங்கையில் நடைபெற்ற திருமணமான அழகிப்போட்டியின் 50 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் போட்டியில் வெற்றி பெற்று இந்தப் போட்டியில் பங்குபற்றத் தகுதி பெற்றுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான இவர் மலேசிய விமானப் பணிப்பெண்ணாக கடமையாற்றி வருகின்றார்.

இந்நிலையில் உலக அழகி போட்டியில் பங்கேற்கவுள்ள துஷாரி ஜெயக்கொடிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


உலக அழகி போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை பெண் துஷாரி. குவியும் பாராட்டு. அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக திருமதி துஷாரி ஜெயக்கொடி நேற்று (19) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.உலகின் 33 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகுராணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி நாளை(21) முதல் 25ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூயார்க்கில்  நடைபெறவுள்ளது.திருமதி துஷாரி ஜெயக்கொடி அண்மையில் இலங்கையில் நடைபெற்ற திருமணமான அழகிப்போட்டியின் 50 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் போட்டியில் வெற்றி பெற்று இந்தப் போட்டியில் பங்குபற்றத் தகுதி பெற்றுள்ளார்.நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான இவர் மலேசிய விமானப் பணிப்பெண்ணாக கடமையாற்றி வருகின்றார்.இந்நிலையில் உலக அழகி போட்டியில் பங்கேற்கவுள்ள துஷாரி ஜெயக்கொடிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement