மட்டக்களப்பை சேர்ந்த 20 வயதுடைய மதுஷிகன் என்ற சாரண மாணவன் பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த மாணவன் நாளை அதிகாலை 1:00 மணிக்கு இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
பாக்குநீரிணையை நீந்தி கடந்து மாலை 1:00 மணியளவில் இலங்கையின் தலைமன்னாரை அடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாரின் தூரமானது 59 கிலோமீட்டராகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.