வசிப்பிட மாகாணங்களின் வெற்றிடத்திற்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சியை நிறைவுசெய்த ஆசிரியர்களை அவர்கள் வசிக்கும் மாகாணஇ மாவட்டங்களில் உள்ள ஆசிரிய வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்கவேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கணேசலிங்கம் விடுத்த வேண்டுகோளை சாதகமாகப் பரிசீலிப்பதாக மத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதில் வழங்கியுள்ளார்.
முதற்கட்டமாக கிழக்கு மாகாண ஆசிரியர்களை அந்த மாகாணத்திலேயே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இலங்கைத் தமிழர் ஆசிரியர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.