சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முதலாவது மீளாய்வு இன்றுஆரம்பமாகியுள்ளது.
இந்த மீளாய்வில் பங்கேற்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வந்திருந்த நிலையில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் கலந்து கொண்டதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மீளாய்வில் இலங்கைக்கான விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணையைப் பாதுகாப்பது, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான மைல்கல் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த மீளாய்வு ஆரம்பிக்கும் முன்னர் 2024ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல பாதை தயாராகும் என நிதியமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்தமை குறிப்பிட தக்க விடயம் ஆகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வில் இலங்கை தொடர்பான முக்கிய விடயம்.samugammedia சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முதலாவது மீளாய்வு இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த மீளாய்வில் பங்கேற்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வந்திருந்த நிலையில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் கலந்து கொண்டதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த மீளாய்வில் இலங்கைக்கான விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணையைப் பாதுகாப்பது, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான மைல்கல் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மீளாய்வு ஆரம்பிக்கும் முன்னர் 2024ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல பாதை தயாராகும் என நிதியமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்தமை குறிப்பிட தக்க விடயம் ஆகும்.