உலக நாடுகளில் பின்பற்றப்படும் STEAM கல்வித் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை இலங்கையில் ஆரம்பிக்கப்படுவதோடு வடமாகாணத்தில் யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும் அங்குரார்பணம் செய்துவைக்கப்படவுள்ளதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் யோன் குயின்ரேஸ் தெரிவித்தார்.
பொறியியல், சமூகக் கல்வி, கணிதம் ஆகிய பாடங்களின் கல்வி முறையை தேசியத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதோடு இந்தக் கவ்வி முறையின் அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பில் கல்வி அமைச்சர் சுசில்பிரேமஜெயந்த அங்குரார்பணம் செய்துவைக்கவுள்ளார்.
95 நாடுகளில் இந்தக் கல்விமுறை பின்பற்றப்படுகின்றது. ஆணால், எமது நாட்டில் இந்த STEM என்ற கற்றல் நடவடிக்கை தற்போது இலங்கையிலும் செயற்படுத்தப்படவுள்ளது.