களுத்துறை - அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பெந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் மாலை நீராடச் சென்ற போது காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலமே நேற்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
16 வயதுடைய மொஹமட் சமீன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சாதாரணதர பரீட்சைக்குத் தோற்ற இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவன் நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிலருடன் பெந்தோட்டை உல்லாச விடுதிக்கு அருகில் உள்ள கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவனின் சடலம் நேற்றையதினம் கரை ஒதுங்கியுள்ளது.
குடும்பத்தினருடன் கடலில் நீராடச் சென்றபோது துயரம் - சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் பரிதாப மரணம். களுத்துறை - அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பெந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் மாலை நீராடச் சென்ற போது காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலமே நேற்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.16 வயதுடைய மொஹமட் சமீன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சாதாரணதர பரீட்சைக்குத் தோற்ற இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவன் நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிலருடன் பெந்தோட்டை உல்லாச விடுதிக்கு அருகில் உள்ள கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.இந்நிலையில் குறித்த மாணவனின் சடலம் நேற்றையதினம் கரை ஒதுங்கியுள்ளது.