• Sep 17 2024

மண் மாபியாக்கும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கும் இடையில் முறுகல் நிலை! samugammedia

Chithra / Aug 25th 2023, 8:18 pm
image

Advertisement

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும் சோதையன்கட்டு பகுதியில் ஒப்பந்த பணியில் ஈடுப்பட்டவர்களுக்கும் இடையில் இன்று மாலை முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பாலர்சேனை பகுதியில் உள்ள சோதையன் கட்டு பகுதியில் கிரவள் அகழப்படுவதாக பிரதேச மக்கள், இராஜாங்க அமைச்சரிடம் முறையிட்டனர்.

இதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இன்று பிற்பகல் அப்பகுதிக்கு நேரடியாக சென்றுள்ளனர்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர், சோதையன்கட்டு பகுதியில் கிரவள் அகழ்வு இடம்பெறுவதை அவதானித்துள்ளனர்.

குறித்த பகுதியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உக்காத கழிவு உள்ளதாகவும் அது உடைப்பெடுத்தால் ஆற்றில் கலக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, சோதையன் கட்டு எனப்படுவது தமிழர் பாரம்பரிய கட்டாகும் அதை தகர்த்து கிரவள் அகழ வேண்டாம் எனவும் தெரிவித்து குறித்த பணியை உடன் நிறுத்துமாறு கோரியுள்ளனர்.

இருப்பினும் தாம் குறித்த பகுதியில் வன இலாகா திணைக்களம், புவிச்சரிதவியல் திணைக்கள ஆகியவற்றில் அனுமதி பெற்றுத்தான் குறித்த ஒப்பந்த பணியை மேற்கொண்டதாகவும் அதிக பணம் செலவழித்துள்ளதாகவும் தெரிவித்து பணியை இடைநிறுத்த முடியாது என ஒப்பந்த பணியில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனை தொலைபேசியில் காணொளி பதிவு செய்தார்கள் என தெரிவித்து அவ்விடத்தில் இரு தரப்பிற்கிடையில் முறுகல் நிலை உருவானது.

இதன்போது அங்கு வந்த கரடியனாறு காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

குறித்த இடத்தில் வைத்தியசாலை கழிவு உள்ளதால் அந்த பணியை தற்காலிகமாக நிறுத்துமாறும் காவல்துறையினர் ஒப்பந்தக்காரர்களுக்கு தெரிவித்து அங்கிருந்த கனரக வாகனத்தையும் அகற்றுமாறும் கோரியுள்ளனர்.

பிரதேச செயலாளரின் அனுமதி இல்லாமல் இடம்பெறும் குறித்த பணி தொடர்பிலும் இதற்கு முன் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்படும் திணைக்களங்கள் தொடர்பில் கலந்துரையாடி இது தொடர்பான முன்னேற்ற நகர்வை மேற்கொள்வதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண் மாபியாக்கும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கும் இடையில் முறுகல் நிலை samugammedia இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும் சோதையன்கட்டு பகுதியில் ஒப்பந்த பணியில் ஈடுப்பட்டவர்களுக்கும் இடையில் இன்று மாலை முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பாலர்சேனை பகுதியில் உள்ள சோதையன் கட்டு பகுதியில் கிரவள் அகழப்படுவதாக பிரதேச மக்கள், இராஜாங்க அமைச்சரிடம் முறையிட்டனர்.இதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இன்று பிற்பகல் அப்பகுதிக்கு நேரடியாக சென்றுள்ளனர்.இதன்போது இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர், சோதையன்கட்டு பகுதியில் கிரவள் அகழ்வு இடம்பெறுவதை அவதானித்துள்ளனர்.குறித்த பகுதியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உக்காத கழிவு உள்ளதாகவும் அது உடைப்பெடுத்தால் ஆற்றில் கலக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.அதேவேளை, சோதையன் கட்டு எனப்படுவது தமிழர் பாரம்பரிய கட்டாகும் அதை தகர்த்து கிரவள் அகழ வேண்டாம் எனவும் தெரிவித்து குறித்த பணியை உடன் நிறுத்துமாறு கோரியுள்ளனர்.இருப்பினும் தாம் குறித்த பகுதியில் வன இலாகா திணைக்களம், புவிச்சரிதவியல் திணைக்கள ஆகியவற்றில் அனுமதி பெற்றுத்தான் குறித்த ஒப்பந்த பணியை மேற்கொண்டதாகவும் அதிக பணம் செலவழித்துள்ளதாகவும் தெரிவித்து பணியை இடைநிறுத்த முடியாது என ஒப்பந்த பணியில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.இதன்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.இதனை தொலைபேசியில் காணொளி பதிவு செய்தார்கள் என தெரிவித்து அவ்விடத்தில் இரு தரப்பிற்கிடையில் முறுகல் நிலை உருவானது.இதன்போது அங்கு வந்த கரடியனாறு காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.குறித்த இடத்தில் வைத்தியசாலை கழிவு உள்ளதால் அந்த பணியை தற்காலிகமாக நிறுத்துமாறும் காவல்துறையினர் ஒப்பந்தக்காரர்களுக்கு தெரிவித்து அங்கிருந்த கனரக வாகனத்தையும் அகற்றுமாறும் கோரியுள்ளனர்.பிரதேச செயலாளரின் அனுமதி இல்லாமல் இடம்பெறும் குறித்த பணி தொடர்பிலும் இதற்கு முன் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்படும் திணைக்களங்கள் தொடர்பில் கலந்துரையாடி இது தொடர்பான முன்னேற்ற நகர்வை மேற்கொள்வதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, குறித்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement