தியாகதீபம் அன்னை பூபதியின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வு தினம் அவர் பிறந்த மண்ணான கிரானில் இன்று (19) உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு சிவில் செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது அவரது உருவப்படத்திற்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச் சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை, அன்னை பூபதி தொடர்பான நினைவுரைகளும் இதன்போது நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.