தியவன்னா ஓயாவில் மீன்பிடிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (27) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
ராஜகிரிய வெலிக்கடை புத்கமுவ வீதியைச் சேர்ந்த எஸ். சயுர ஜுமா என்ற 18 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மேலும் மூன்று நண்பர்களுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள தியசரு தோட்டத்திற்கு அருகில் வந்து, தியவன்னா ஓயாவை சுற்றி கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு வேலியை அத்துமீறி நுழைந்து நேற்று (26) காலை படகின் உதவியுடன் தியவன்னா ஓயாவிற்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது, இரண்டு யுவதிகள் பயணித்த படகு கவிழ்ந்த நிலையில், இளைஞர் ஒருவர் நீந்தி கரைக்கு சென்ற நிலையில், மற்றைய இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போனார்.
இந்நிலையில் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.