கடந்த சில தினங்களுக்கு முன்னால் யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமி வைசாலியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி, வைத்தியசாலைக்கு முன்பாக சற்றுமுன் குறித்த சிறுமியின் உறவினர்களால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பதற்றமாக நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த போராட்டத்தில் சிறுமியின் உறவினர்களுடன் அரசியல் தரப்பினர், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்துகொண்டுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலையின் வாயிலை மறித்து போராட்டம் முன்னேடுக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம். நீதி கோரிய போராட்டத்தில் பதற்றம்.samugammedia கடந்த சில தினங்களுக்கு முன்னால் யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமி வைசாலியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி, வைத்தியசாலைக்கு முன்பாக சற்றுமுன் குறித்த சிறுமியின் உறவினர்களால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பதற்றமாக நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த போராட்டத்தில் சிறுமியின் உறவினர்களுடன் அரசியல் தரப்பினர், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்துகொண்டுள்ளனர்.யாழ் போதனா வைத்தியசாலையின் வாயிலை மறித்து போராட்டம் முன்னேடுக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.