உலகப் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தில் உக்ரேனின் கொடி வண்ணத்தில் விளக்குகள் ஒளிரவிடப்பட்டு உக்ரனுக்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
யுத்தம் விரைவில் நிறைவுக்கு வரவேண்டும் எனவும், உக்ரேன் மக்களின் வாழ்வு அமைதிக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர்களுக்கு ஆதரவாக பரிசில் மக்கள் ஒன்று கூடி பிராத்தனை செய்தனர்.
இதன்போது ஈஃபிள் கோபுரத்தில் உக்ரேனின் கொடி வண்ணத்தில் (மஞ்ச மற்றும் நீலம்) விளக்குகள் ஒளிரவிடப்பட்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
உக்ரைன் போர் ஆரம்பமாகி நேற்றுடன் ஒரு வருடம் நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.