பல்லம ரம்பத்தலாவத்த-அடிகம பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
ரம்பத்தலாவத்தை அடிகம பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பெண்ணொருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பெண் தற்போது நிகவெரட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் ஏர் ரைபிள் ரக துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம் samugammedia பல்லம ரம்பத்தலாவத்த-அடிகம பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.ரம்பத்தலாவத்தை அடிகம பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பெண்ணொருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்த பெண் தற்போது நிகவெரட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர் ஏர் ரைபிள் ரக துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.