தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் காலை ஆரம்பமாகியது.
தற்போது தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தமுடியும் என்பதுடன் இறுதி நினைவேந்தல் நிகழ்வானது மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.