• May 01 2024

படுக்கை அறைக்குள் பதுங்கியிருந்த முக்கிய பொருள்...! அதிகாரிகள் அதிர்ச்சி ...!samugammedia

Sharmi / Nov 3rd 2023, 1:12 pm
image

Advertisement

வீடொன்றில் படுக்கை அறையில் பதுக்கி வைக்கபட்டிருந்த ஐஸ் போதைப்பொருளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பதுளையில் உள்ள வீடொன்றில் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6600 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதனுடன் தொடர்புடைய 32 வயதுடைய கொட்டகொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக பதுளை  போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

ஐஸ் போதைப்பொருள் வாங்கும் போர்வையில்  குறித்த வீட்டை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது படுக்கையறையில் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேகநபர்  இன்றைய தினம்(03)  பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுக்கை அறைக்குள் பதுங்கியிருந்த முக்கிய பொருள். அதிகாரிகள் அதிர்ச்சி .samugammedia வீடொன்றில் படுக்கை அறையில் பதுக்கி வைக்கபட்டிருந்த ஐஸ் போதைப்பொருளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பதுளையில் உள்ள வீடொன்றில் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6600 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் அதனுடன் தொடர்புடைய 32 வயதுடைய கொட்டகொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக பதுளை  போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.ஐஸ் போதைப்பொருள் வாங்கும் போர்வையில்  குறித்த வீட்டை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது படுக்கையறையில் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்சந்தேகநபர்  இன்றைய தினம்(03)  பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement